மதுரையில் அக்.29-ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மதுரை விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் ஒவ்வொரு மாதமும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான, மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் 29.10.2021 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கோவியேட்-19 நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, சமூக இடைவெளியினை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்திட வேண்டும்மென்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu