மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்ற கல்விநிறுவனம்,அதற்கு என்று தனி சட்டங்கள் தமிழக சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணிபுரியும்அலுவலர்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிதிக்குழு,ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை ஒப்புதலோடு ஊதியம்வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 22.3.2022 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில்,அனைத்து பல்கலை நிதி அலுவலர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டநடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஊழியர்களுக்குஊதியம் மறு நிர்ணயம் செய்யவும், மேலும் ஊதியத்தில் பின்தேதியிட்டு பிடித்தம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அறிந்து ,அலுவலர்கள் அனைவரும் மிகுந்தஅதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் உள்ளாயினர்.

அலுவலர்களின் அனைத்து பதவி உயர்வும் சரி அவர்களுக்குவழங்கப்பட்ட ஊதியமும் சரி 1.1.1996 பல்கலை அனுமதிக்கப்பட்டபதவி மற்றும் ஊதிய அளவுகோலில் உள்ளபடியேவழங்கப்பட்டுவருகிறது.ஆனால், உள்ளாட்சி தணிக்கை துறை தடைகளை ஏற்படுத்திஅரசிடம் இருந்து பெறும் நிதியை குறைத்து பல்கலையின் மாண்பிற்கும், செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும்தடைக்கல்லாக உள்ளது. 7வதுஊதியகுழுவின் பரிந்துரையைஅமுல்படுத்தும்சூழ்நிலையில் 02.02.2018 அன்று நடந்தமதுரை காமராசர்பல்கலைக்கழகத்தின் நிதிக்குழுவில் அன்று பதவியில் இருந்தநிதிசெயலரும், உயர்கல்வித்துறை செயலரும் தமிழக அரசின் கடிதஎண் 174 மற்றும் தணிக்கை தடைகள் அனைத்தையும் பரிசீலித்துபணியில்அலுவலர்கள் அனைவருக்கும் பல்கலையில்அனுமதிக்கப்பட்ட ஊதிய அளவுகோலில் 7வது ஊதிய குழுவின்பரிந்துரையை அமுல்படுத்துவது என்றும் ,மேலும் இந்த தேதிக்கு பிறகுபணி நியமனம் ஆகும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் ஊதியவிகிதத்தை அமுல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் 13.03.2018 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டு அமுல்படுத்தப்பட்டது.இந்த சூழ்நிலையில் 04.03.2022 நிதிநிதி அலுவலர் கூட்டத்தில் எடுக்கப்பட்டநடைமுறைகளை செயல்படுத்துவது என்பதுகொள்கை முடிவாகாது.மேலும், ஊதிய மறுநிர்ணயம் மற்றும் ஊதிய பிடித்தம் என்பது 2.2.2018மற்றும் 13.3.2018 நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்திற்குமுரணானது.ஆகவே மேலே கூறிய உண்மைத்தன்மை அடிப்படையில் இந்தஆட்சிப்பேரவை, 22.03.2022 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழுகூட்டத்தில் ஊழியர்களின் ஊதிய மறு நிர்ணயம் மற்றும் ஊதியபிடித்தம் தொடர்பான ஆட்சிக்குழு தீர்மானத்தை மறு பரிசீலனைசெய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2.2.2018 மற்றும் 13.3.2018நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்தின்படி ஊதியவிகிதங்களைதொடர்ந்து வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

Tags

Next Story