/* */

சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்றும் பணி தொடக்கம்

சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்றி இணையத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியதாக மதுரை எம்பி வெங்கடேசன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

சிறப்பு ரயில்களை  சாதாரண ரயில்களாக மாற்றும் பணி தொடக்கம்
X

பைல் படம்

சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக ஆக்கும் பணிகள் ஏழு நாட்களில் பணி முடியும் எனவும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட தகவல்: கோவிட் காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்ட பல்வேறு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும் , முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.



அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைத்து வருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முக முக்கியமான வெற்றியை பெற்றுள்ளோம். கோவிட் காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டணமும் உயர்த்தப்பட்டிருந்தது. எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி , கட்டணத்தினை குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தேன். அதில் மிக முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது.

சிறப்பு ரயில் வண்டிகளை சாதாரண ரயில் வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நேற்று இரவு துவங்கியது. இரவு பதினொன்றரை மணி முதல் காலை ஐந்தரை மணி வரை ஆறு மணி நேரம் இந்த பணி நடைபெறும். நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப் பணி ஏழு நாட்கள் படிப்படியாக நடைபெறும். நேற்று இரவு முதல் கட்டமாக 28 வண்டிகள் எண்கள் மாற்ற திட்டமிடப்பட்டது.இந்த ஏழு நாட்களில் ஆறு மணிநேர காலத்தில் பயணிகள் பயணச்சீட்டுகளை பதிவு செய்ய இயலாது. எண்கள் மாற்றப்பட்டு ரெகுலர் வண்டிகளாக ஆக்கப்பட்டபின் வழக்கமான கட்டணமும், முதியோர் சலுகை உட்பட மற்ற சலுகைகளும் நடைமுறைக்கு வரும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். சு வெங்கடேசன் தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...