/* */

மதுரை அருகே மாலை அணிந்து, விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

மதுரை மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கியுள்ளனர். !

HIGHLIGHTS

மதுரை அருகே மாலை அணிந்து, விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
X

மதுரை அருகே விக்கிரமங்கலத்தில் மாடை அணிந்து விரதத்தை தொடங்கிய ,ஐயப்ப பக்தர்கள்.

விக்கிரமங்கலம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சோழவந்தான் நவ .17.

சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அடுத்துள்ள தத்துவமசி ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு, விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.


இக்கோவிலின் குருநாதர் ஆர்.கே. சாமி, சிறுவர் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று கார்த்திகை முதல் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் திரளாக வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

தினசரி, ஐயப்ப பக்தர்கள் பஜனை மற்றும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில், விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

இதே போல், சோழவந்தான் ஐயப்பன் கோவில், தென்கரை ஐயப்பன் கோவிலிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

Updated On: 17 Nov 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நேருவின் 60வது நினைவு தினம் : பிரதமர் மோடி அஞ்சலி..!
  2. உலகம்
    ராணுவ செயற்கைக்கோள் ஏவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங்...
  3. இந்தியா
    ரயிலில் பெண் பயணிகளுக்கான சட்ட நெறிமுறைகள் என்ன தெரியுமா..?
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. உலகம்
    இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக...
  7. விளையாட்டு
    ஐபிஎல் 2024 பரிசுத் தொகை: கேகேஆர் ரூ. 20 கோடி, எஸ்ஆர்எச் ரூ 12.5
  8. சினிமா
    கூலி படத்தில் சத்யராஜ்? இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
  9. இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2...
  10. இந்தியா
    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு...