/* */

சோழவந்தான் அருகே ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது

rowdy arrested murder case near Cholavantan

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது
X

ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (37). பிரபல ரவுடியான இவர் மீது, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்றுமுன்தினம் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில் , திண்டுக்கல்லில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது ,இவரை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டினர். இதில், ரவுடி சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த காடுபட்டி போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று கொலை குற்றவாளிகள் ரமேஷ்பாபு (28), சுகுமார் (29), அலெக்ஸ்குமார் (28) ஆகிய மூவரும் மதுரை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராகினர். மேலும், இவர்களின் நண்பர் மணிகண்டனை, குண்டார் சக்திவேல் கொலை செய்த காரணத்திற்காக பழிக்குபழியாக நேற்றுமுன்தினம் குண்டாறு சக்திவேலை வெட்டி கொலைசெய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கைதான குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

Updated On: 2 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...