/* */

பேரையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

பேரையூரில் தலைக்கவசம் அணியாததால் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம்.

HIGHLIGHTS

பேரையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் வலையங்குளம் சாலையில் விக்னேஷ் (25 ), சங்கர் (25) இருவரும் தாடையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது அதிவேகமாக சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சங்கரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விக்னேஷ் என்பவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததால் உயிர்பலி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து குறித்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் கூறுகையில், அனைவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது மிக முக்கியம். இவ்விபத்து ஆனது தானாக நிலைதடுமாறி விழுந்து உயிர் பலியாகி உள்ளது. இறந்த வாலிபர் தலைக்கவசம் அணிந்திருந்தால் தலையில் காயம்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை, உயிர்பலி ஏற்பட்டிருக்காது.

அனைவரும் கண்டிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்பது தங்களது குடும்பங்களை கருத்தில்கண்டு தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 14 Dec 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...