/* */

திருமங்கலம் அருகே பேருந்து மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே பேருந்து மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு
X

பலியானவர்.

கோவையில் இருந்து சிவகாசிக்கு அரசு பேருந்தை ஓட்டுநர் ராமசாமி (53) ஓட்டிச் சென்றார். திருமங்கலம் அருகே ஆவல்சூரன்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது .

இதில் சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஸ்டீபன் (42), தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மைக்கேல் ஸ்டீபனை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மைக்கேல் ஸ்டீபன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  7. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு