/* */

தந்தை கொலையில் மகனுக்கு தொடர்பு: போலீசார் சந்தேகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் தந்தை கொலை சம்பவத்தில் மகனை போலீசார் தேடுகின்றனர்

HIGHLIGHTS

தந்தை கொலையில்  மகனுக்கு  தொடர்பு: போலீசார் சந்தேகம்
X

மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் சுபா சென்னையில் வசிக்கிறார். ராமகிருஷ்ணன் மனநிலை பாதித்த மகன் காசி பிரபுவுடன் வசித்து வந்தார்.

காசிபிரபு அவ்வப்போது வெளியே சென்றுவிடுவாராம். ராமகிருஷ்ணனுக்கு அவரது சகோதரி தனலட்சுமி உணவு கொடுத்து பராமரித்து வந்தார். மே 23-ம் தேதி இரவு உணவு கொடுக்கச் சென்றபோது, ராமகிருஷ்ணன் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸார் உடலை மீட்டு விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.ராமகிருஷ்ணனுக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில் தந்தையை மகன் கொன்றிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்பதால் போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 25 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...