மதுரை: திருமங்கலம் அருகே தேங்கிய குப்பையால் தொற்று நோய் உருவாகும் அபாயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலை சாலை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடக் கூடிய முக்கிய சாலையாகும் இப்பகுதியில் காய்கறி மார்க்கெட் மளிகை கடை அதிகம் உள்ளதால், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் அனைவரும் வந்து செல்லும் முக்கிய இடமாகும்.
இப்பகுதியில், தனியார் மருத்துவமனைகள் உள்ளதால் அனைத்து விதமான குப்பைகளை சாலையோரம் பொதுமக்களால் கொட்டப்படுகின்றது. மேலும் அருகே பலகாரக் கடைகள் கழிவுகள் உணவு கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் புதை சாக்கடையும் நிரம்பி செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இப்பகுதி வாழ் மக்கள் திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சியர் இதில் தீவிர கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu