Begin typing your search above and press return to search.
பேரையூர் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு
பேரையூரில் அருகே எஸ்.வி.என்.நகரில் புதிய புறக் காவல் நிலையத்தை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு திறந்து வைத்தார்
HIGHLIGHTS
மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் - அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் ஏற்படுத்தப்பட்டது
புற காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது மதுரை சரக காவல்துறை துணை தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , காவல் துணைக் கண்காணிப்பாளர் சரோஜா பேரையூர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்
இப்புற காவல்நிலையத்தில் காவலர்கள் தொடர்ந்து பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் குற்றங்கள் ஏதும் நடவாமல் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவும் இப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.