Begin typing your search above and press return to search.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சரக ஆஸ்டின் பட்டி காவல் நிலையம் இடமாற்றம்
ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை மதுரை தோப்பூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துதுறை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்.
இதில், மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர். மு. மணிமாறன் மற்றும் மதுரை மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர், இந்தக் காவல்நிலையம் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பொதுமக்கள் போக்குவரத்து வசதியுடன் புதிய கட்டிடம் தோப்பூர் பகுதியில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.