டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தடுக்க அரசு கவனம் செலுத்த முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

பைல் படம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
டெங்குவால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதற்கு முன் அரசு டெங்கு ஒலிக்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, .மதுரை மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் மேகா( 7 )டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாவட்ட சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே இது குறித்து 6. 11 .2021 தங்களின் கவனத்திற்கு பருவமழை காலத்தில் பரவுகின்ற டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஜிகா போன்ற நோய்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன். இந்நிலையில் அந்தக் குழந்தை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ள்ளது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இனியும் இதுபோல் துயர சம்பவங்கள் நிகழாத வண்ணம் , மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்துடன், 6. 11 .2021 அன்று தங்களின் மேலான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் இணைத்துள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுமி மேகாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu