/* */

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள்

HIGHLIGHTS

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க  வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
X

இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 35,873 பேர் பாதிக்கப்பட்டனர் இதில் 448 நபர்கள் பலியாயினர். மதுரையில் 1352 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு 28 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு ஏற்பட்டு அதன்மூலம் உயிர்ப்பலி ஏற்படுவதால் மதுரை மக்களிடத்தில் பெரிய அச்சம் சோகம் உருவாகி வருகிறது

தற்போது 12,875 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கியமாக மதுரையில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் 12 மருத்துவர்கள் 7 செவிலியர்கள் உட்பட மருத்துவம் சார்ந்த 25 பேர் பாதிப்படைந்துள்ளனர்

தற்போது நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையாக நாளை முதல் ஒரு வாரம் தளர்வு இல்லா முழு ஊரடங்கை புதிய அரசு அறிவித்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இன்றி ஊரடங்கில் நாம் வெற்றி பெற முடியாது.

முதல் அலையின் போது‌ முந்தைய அரசு போட்ட முழுஊரங்கிற்கு நல்ல ஒத்துழைப்பை மக்கள் வழங்கினார்கள். அதேபோல் மதுரை மாவட்ட மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஒருவாரம் தளர்வில்லா முழு ஊரங்கிற்கு ஒத்துழைப்பை வழங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்

Updated On: 23 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!