/* */

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகம்
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் அம்மாபட்டி கிராமத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில் மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் பங்கேற்பு.

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னிஅறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் அம்மாபட்டி கிராமத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும், பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும்.

அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும்,குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும்,பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும் மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

முன்னதாக பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் , பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி, திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!