/* */

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இடுப்பு, மூட்டு மாற்று சிகிச்சை செய்து சாதனை.

HIGHLIGHTS

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம்  மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை
X

எலும்பு மூட்டு நவீன கருவி பொருத்தி திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை.

எலும்பு மூட்டு நவீன கருவி பொருத்தி திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக எலும்பு மூட்டு தேய்மானம் இடுப்பு தேய்மானம் போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகி நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன கருவி பொருத்தி இடுப்பு மற்றும் முழங்கால் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை முதன்முதலில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

டாக்டர். பி. சிவகரன் அதிநவீன கருவி பொருத்தி சிகிச்சையை அளித்து வருகிறார். ராஜேந்திரன் கப்பலூரை சேர்ந்த இவருக்கு பல வருடங்களாக எலும்பு மூட்டு தேய்மானம் இருந்துவந்துள்ளது இதேபோல் விருதுநகரைச் சேர்ந்த காந்தம்மாள், கப்பலூரரைச் சேர்ந்த ஜெயா இவர்கள் 3 பேருக்கும் மூட்டில் நவீன கருவி பொருத்தி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவருக்கு இடுப்பு தேய்மானம் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இடுப்புக்கு நவீன கருவி பொருத்தி அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் பி.ராம்குமார் அவர்கள் தலைமையில் எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் பி.சிவகரன் அவர்கள் இச்சிகிச்சையை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் முன்பு பல லட்சங்கள் செலவழித்தும் இச் சிகிச்சைக்கு தீர்வு இல்லாதபொழுது தற்போது அரசு மருத்துவமனையில் நவீன கருவி மூலம் இச்சிகிச்சை செய்துவருவது இப்பகுதி மக்களிடையே எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் பி.சிவகரன் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் சிவகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:எலும்பு மூட்டு தேய்மானம், இடுப்பு தேய்மானம் ,முழங்கால் தேய்மானம் போன்ற நோய்களுகள் தனியார் மருத்துவமனையை நாடி பல லட்சங்கள் செலவ. செய்து கஷ்டப்பட வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்து தருவதாகவும் இதனால் அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு தினங்களில் வீடு திரும்பலாம், நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம், மதுரை மாவட்டம் மற்றும் திருமங்கலம் தொகுதி மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சிகிச்சையால் எந்தவித பின் விளைவுகள் ஏற்படாது எனவும் இயல்பான நிலையில் இக்கருவி சிகிச்சை செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

Updated On: 9 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு