/* */

திருமங்கலம் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்ந்தக்க கவுன்சிலர்கள் வர மறுப்பு.

HIGHLIGHTS

திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 18 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நகர்மன்ற தலைவருக்கான திமுக வேட்பாளராக ரம்யா முத்துக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதே சமயத்தில் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் தனது மருமகள் ஷர்மிளாவை தலைமையை எதிர்த்து தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தனது ஆதரவாளர்களான 12 உறுப்பினர்களுடன் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் ரம்யா முத்துக்குமார் தரப்பினர் மற்றும் அதிமுக வார்டு உறுப்பினர்கள் என 14 பேர் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தலைவர் மறைமுக தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியோன் அறிவித்தார்.

Updated On: 4 March 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...