இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில்  இளைஞர் உயிரிழப்பு
X
மதுரை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 66). இவரது மகன் முத்துமணி வயது 44). இருவரும், டுவீலரில் பெருங்குடி ரிங்ரோடு மண்டேலா நகர் பகுதியில் சென்ற போது, கன்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மகன் முத்துமணி இறந்தார். தந்தை நல்லுசாமி பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்த முத்துமணி, உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, பெருங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!