மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமானங்கள் வர வலியுறுத்துவோம்: நிதியமைச்சர்
![மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமானங்கள் வர வலியுறுத்துவோம்: நிதியமைச்சர் மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமானங்கள் வர வலியுறுத்துவோம்: நிதியமைச்சர்](https://www.nativenews.in/h-upload/2022/12/19/1631725-img-20221219-wa0130.webp)
மதுரை அருகே அவனியாபுரத்தில் நடைபெற்ற நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவில், நிதியமைச்சர் பி டி ஆர். பழனிவேல் தியாகராஜன், துணை மேயர் நாகராஜன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் உள்ள நுற்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு, நூற்பொருள் வியாபாரை சங்க தலைவர் குத்தாலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன் மற்றும் துணை தலைவர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார்.துணை மேயர் நாகராஜன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: வியாபாரிகள் சங்கம் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் பொதுநல சேவையாக நான் ஒரு முதல் 500 பேருக்கு இலவச மருத்துவமனை கட்டி மக்களுக்கு சேவை புரிந்து வருவது பாராட்டுக்குரியது.
மூன்று நாட்கள் நான் இங்கு நாட்கள் மதுரையில் தங்கி பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அவசர அவசரமாக தற்பொழுது ஒரே நாளில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஜிஎஸ்டி கூட்டத்தில், பங்கு பெற வேண்டி முதலமைச்சர் உத்தரவுபடி செல்ல வேண்டி இருப்பதால்,ஒரே நாளில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் உங்களுடன் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை.
நிகழ்வில், கலந்து கொண்ட என்னுடன் எனது நண்பர்களும் வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ,நுகர்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வைத்துள்ளனர். அதில் , மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் ஆக்கி பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வர வேண்டிய கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக , நானும் முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். .மதுரை வளர்ச்சி திட்டங்களில் பத்து ஆண்டுகள் எந்த பணியிலும் நடைபெறவில்லை என குறிப்பிட்டு உள்ளீர்கள் . ஆகவே, பல்வேறு திட்டங்களை துரிதப்படுத்த முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கும்,மதுரை மாநகரின் உள்கட்ட வளர்ச்சிப் பணிகளில் வணிகர்கள் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
மதுரைக்கு டைட்டல் பார்க் நிறுவனம் போல் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் மூன்று மாதங்களில் நடக்க வேண்டியதுஆறு மாதங்கள் கழித்து நடக்கிறது.மேலும், வரும் 2023 ஜூன் மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரை நடைபெற உள்ளதால், மதுரை வர்த்தகர்கள் வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தின் மூலம் நிறைவேற்றி உங்களுக்கு துணை நிற்போம்.
மேலும், மதுரை மாநகரில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களை மாற்று இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக கூறினீர்கள். ஒரு மாநகரின் வளர்ச்சி என்பது திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும் போது போக்குவரத்து, கூட்ட நெரிசல், தண்ணீர், சாக்கடை, குப்பை இது போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்படும் போது சில மாற்றங்களை தவிர்க்க முடியாது. உங்களின் பொதுவான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிந்த வரையில் வணிகர்கள் வர்த்தக நிறுவனங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நிதியமைச்சர் பி டி ஆர். பழனிவேல் தியாகராஜன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu