நிலையூர் கால்வாயில் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்

நிலையூர் கால்வாயில் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
X

திருப்பரங்குன்றம் நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதை, பூத்தூவி வரவேற்ற கிராம விவசாயிகள்:

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில், அமைந்துள்ள நிலையூர் கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நிலையூர் கண்மாய் முழு கொள்ளளவு எட்டி, நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், இந்த கண்மாய் மூலம் சுற்றியுள்ள 22 கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், 2,500 முதல் 3,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய இயலும் என விவசாயிகள் கூறினர்.

இதன் ஒரு பகுதியாக, நிலையூர் கண்மாய் மறுகால் பாய்வதால் கருவேலம்பட்டி, நிலையூர், கப்பலூர், கூத்தியார்குண்டு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி கூத்தியார் குண்டு கண்மாய் மாறுகால் பகுதியில், கூத்தியார்குண்டு விவசாய சங்க செயலாளர் கருணாநிதி, கப்பலூர் விவசாய சங்கத்தலைவர் ராஜகண்ணன், சொக்கநாதன்பட்டி விவசாய சங்கத்தின் முருகன் ,அய்யங்காளை மற்றும் ஊர் பெரியவர்கள் என, அனைவரும் மடையிலிருந்து வெளியேறும் தண்ணீருக்கு மலர்தூவி தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Tags

Next Story
Similar Posts
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மதுரையில் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு அபராதம் : மாநகராட்சி ஆணையாளர்..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
மதுரை கோயில்களில், சுவாதி நட்சத்திர விழா!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ஃபோன் ரீசார்ஜ் விலை குறையுதா? பயனர்களுக்கு நல்ல செய்தி வருதுடோய்..!
மதுரையில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு : அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!