மதுரை அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக இருவர் பிடிபட்டனர்

மதுரை அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக இருவர் பிடிபட்டனர்
X

மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிடிபட்ட ரேஷன் அரிசு மூட்டைகள்

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் -பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை என, மதுரை மாவட்ட எஸ்பி எச்சரித்துள்ளார்

மதுரை அருகே லாரியில் ரேஷன் அரிசியை கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (31) முத்துப்பாண்டி(35) ஆகியோரை கைது செய்து செய்தனர்.

மேலும், இது சம்பந்தமாக எதிரியிடமிருந்து ரேஷன் அரிசி சுமார் 46 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனம் (லாரி) முன்று சக்கர (ஆட் டோ) வாகனம், இரண்டு சக்கர வாகனம் (பைக்) ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் எதிரிகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் எச்சரித்து உள்ளார்கள்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?