மதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

மதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
X

மதுரை அருகே கஞ்சா விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனையூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது, சட்டத்திற்குப்புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பாலு, சுரேஷ் ஆகிய பேரை கைது செய்து செய்தனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா, ரூ.7 ஆயிரம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture