/* */

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது
X

மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் அமாவாசை(42). இவர், அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட போது தந்தை அய்யனார் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதுபோதையில் வந்த அமாவாசை வீட்டின் முன்பு வைத்திருந்த கடப்பாரை கம்பியால், தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து, அமாவாசையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்