மதுரை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டத்தில், மூன்றாவது நாளாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கடும் வெப்பம் நிலவியது. பகல் நேரங்களில், சில இடங்களில் வெப்பக் காற்று வீசியது. இதை தணிக்கின்ற வகையில் மதுரை நகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகலில் மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், திருமங்கலம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை நகரை பொருத்தமட்டில், பிற்பகலில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்கிறது.
இதனால், மதுரை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால், மதுரை நகரில் அண்ணா நகர் கோமதிபுரம், தாசில்தார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில், மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் தேங்கிய நீரை உடனடியாக அகற்ற, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.