மதுரை அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
X

பலத்த மழையால் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததைக் அகற்றக்கோரி, கருப்பாயூரணியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை அருகே கருப்பாயூரணியில் மழைநீரை அகற்றக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து, பாதிப்பு உண்டாகி உள்ளது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கருப்பாயூரணி, ஒடைப்பட்டி, ஒத்தப்பட்டி, திடியனூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழையால், கல்வாயில் மழைநீர் பெருக்கெடுத்தது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், மதுரை, சிவகங்கை சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.பல கிராமங்களில், மழைநீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளில் உள்ளே புகுந்துள்ளது. கருப்பாயூரணியில் பகுதிகளில், உள்ள வீடுகளில் சூழ்ந்த மழைநீரை அகற்ற வலியூறுத்தி, கிராம மக்கள், மதுரை- சிவகங்கை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை- சிவகங்கை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future