/* */

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி பேரூராட்சிபகுதியில் மஞ்சப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
X

சோழவந்தான் பேரூராட்சி சார்பில்  மேற்கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பேரூராட்சி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் மற்றும் மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதற்காக, தினசரி சந்தை பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அனைத்து கடைதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், தவிர்க்க நிலையான மாற்றத்தினை ஏற்படுத்திட அதற்கு தேவையான மாற்றுப் பொருட்களைகொள்முதல் செய்து அனைத்து கடைகளிலும் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி மன்றத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Updated On: 30 Sep 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்