மதுரையில் புறக் காவல் நிலையம் மாநகர ஆணையர் லோகநாதன் திறப்பு

மதுரையில் புறக்  காவல் நிலையம் மாநகர ஆணையர் லோகநாதன்  திறப்பு
X

மதுரையில் புற க் காவல் நிலையத்தை திறந்து வைத்தார் ,ஆணையாளர் லோகநாதன்.

Peripheral Police Station Inauguration மதுரையில் புறக்காவல் நிலையத்தை மாநகர போலீஸ் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.

Peripheral Police Station Inauguration

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அவ்வப்போது குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது வாடிக்கையான ஒன்று. அதுமட்டும் அல்லாமல் அ ன்றாட நிகழ்வுகளுக்கும் போதிய பாதுகாப்பு தரவேண்டியது போலீஸ்துறையின் கட்டாயமாக உள்ளது. அதுவும் இரவு நேரங்களில் ஒவ்வொரு நகரங்களில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் கூட குற்றச்சம்பவங்களாக உருஎடுக்கும் சூழல்தான் உள்ளது. காரணம் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வருபவர்களினால் பல பிரச்னைகளை மாநில காவல்துறையானது சந்தித்து வருகிறது. எனவே போலீஸ் ஸ்டேஷன் துாரமாக உள்ள இடங்களில் புறக்காவல் நிலையம் அமைத்து அங்குள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அந்த வகையில்

Peripheral Police Station Inauguration




மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து வைத்தார்.குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாகவும்,போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாகவும் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புறக்காவல் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் ,இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு),சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புறக்காவல் நிலையத்தின் பணிகள், பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது

Tags

Next Story