அலங்காநல்லூர் அருகே மூன்று பேர் பங்கேற்கும் கைப்பந்து போட்டி..!

அலங்காநல்லூர் அருகே கைப்பந்து போட்டி.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேட்டுப்பட்டி ரூபன்&கோ மோகன் சார்பில் முதல் பரிசு ரூபாய் 6,001 வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி திமுக கிளைச் செயலாளர் விஜயன் சார்பில் இரண்டாவது பரிசாக 5,001 வழங்கப்பட்டது. ஊராட்சி செயலர் தெய்வேந்திரன் சார்பில் 4,001 மூன்றாவது பரிசும், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் சார்பில் 3,001 நான்காவது பரிசும் வழங்கப்பட்டது. மற்றும் மாணிக்கம்பட்டி ரத்னாஸ் சார்பில் கோப்பைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை, 66,மேட்டுப்பட்டி சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டு, பொதுவான விளையாட்டிப்போட்டிகள் என நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று பேர் கொண்ட ஒரு அணி கலந்துகொள்ளும் கைப்பந்து போட்டிகள் நடந்தது.
இந்த மூன்று பேர் பங்கேற்கும் கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu