உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழகம் புதிய உதயம் :பா.ஜ.க.வுடன் தேர்தல் உடன்பாடு

மதுரையில் உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.
New Political Party Inagural Function
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணியில் மதுரை, திருச்சி என இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளோம் என மதுரையில் உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஆறுமுகம் பிள்ளை பேட்டியளித்தார்.
தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் மகா சபையின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ஆறுமுகம் பிள்ளை, பிறந்தநாளை முன்னிட்டு ,மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ. உ . சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது,
இக்கூட்டத்தில், "உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற தனது புதிய கட்சியை ஆறுமுகம் பிள்ளை துவக்கி வைத்தார், இந்நிகழ்வில் ,சிறப்பு விருந்தினராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உதவியாளர் மகேந்திர பிரசாத், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் வன்னி விநாயகம் பிள்ளை, கம்பம் துரைப்பாண்டியன், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், மாநில துணை அமைப்பு செயலாளர் சங்கர், சந்திரசேகரன் பிள்ளை, மாநில இளைஞரணி தலைவர் திருக்குமரன், ராம்குமார், தர்மா, முருகன், வேளிர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலமுருகன், சுல்தான் பாய், நாகரத்தினம், முத்துப்பாண்டி, முருகன், சுப்ரமணியம் ஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆறுமுகம் பிள்ளை , தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணியில் மதுரை, திருச்சி என இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளோம், மக்களவை தேர்தலில், எங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கண்டிப்பாக கிடைக்கும் இரண்டு தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்தார். பின்னர், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu