மதுரை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணயக்குழு ஆய்வு
மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
மதுரை மாநகராட்சி, ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்வதை, மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.
தேசிய தரச்சான்று திட்டமானது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டம் ஆகும். இத்திட்டமானது, சுயமதிப்பீடுஇ மாநில அரசின் மதிப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும். மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஒன்றிய அரசின் குழு பேராசிரியர். அரசு மருத்துவமனை (நாசிக்) அபிஷேக் சுபாஷ் கோசாவி மற்றும் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் (சூரத்) டாக்டர் மகேந்திர பட்டேல் ஆகிய இருவரும் மதிப்பீடு அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் நேற்று பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை ஆகிய இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் (2022 முதல் 2023) பெற்றுள்ளது.
மேலும், 2023-2024 ஆண்டில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினர் மருத்துவமனையில், உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மேயர்,பொதுமக்களுக்கு தரமான பொது சுகாதார சேவையினை தங்கு தடையின்றி வழங்குவது நமது முதல் இலக்காக பணியாற்ற வேண்டும் எனவும் மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேசிய தரச்சான்று பெறுவதற்கு அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை,மாவட்ட தர மருத்துவ அலுவலர் மரு.பொன்பார்த்திபன், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu