சர்வதேச யோகா தினம்-அசத்திய மாணவர்கள்

சர்வதேச யோகா தினம்-அசத்திய மாணவர்கள்
X
உலகயோகா தினத்தை முன்னிட்டு யோகா சகோதரர்கள் 21 நிமிடங்களில், 21 யோகாசனங்கள் செய்து சாதனை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அசாருதீன் சல்மான் கான் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே பல்வேறு யோகாசனங்கள் மூலம் சாதனை புரிந்துள்ளனர்.

இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா சகோதரர்கள் இருவரும் 21 நிமிடங்களில் 21 யோகா ஆசனங்கள் செய்தனர்.ஆணிப்பலகையில் யோகாசனம்,ஹெல்மெட், கண்ணாடி டம்ளர், நாற்காலி ஆகியவற்றில் உடலை வருத்தி புதுமையான முறையில் 21 ஆசனங்கள் செய்தனர்.

யோகா கலை மூலம் உடல் வலிமை, நீண்ட ஆரோக்கியம், மனவலிமை பெற முடியும் உடலுக்கும், மனதிற்கும் பயிற்சியாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் , இயற்கை உணவே உடலுக்கு ஆரோக்கியமானது. ஆகையால் காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளான பருப்புகள், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உண்ண வேண்டும் எனவும் தெரிவித்தனர்

Tags

Next Story