மதுரை அருகே நலிவுற்ற கலைஞர்களுக்கு தனியார் நிறுவனம் புத்தாடை வழங்கல்

மதுரை அருகே நலிவுற்ற கலைஞர்களுக்கு தனியார்  நிறுவனம் புத்தாடை வழங்கல்
X
கொரோனா தொற்று இரண்டாவது அலையில் வேலை வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இந்த உதவி அளிக்கப்பட்டது

மதுரை அருகே ராம்ராஜ் நிறுவனம் சார்பில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேஷ்டி சட்டை வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா , சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ராமராஜ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேஷ்டி, சட்டைகள் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று இரண்டாவது அலையில் வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் வறுமையில் வாடும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்யும் விதமாக, நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்ற விழாவில், வாய்ஸ் டிரஸ்ட் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,140 பேருக்கு, வேஷ்டி சட்டைகள் வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture