மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய மேயர்

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய மேயர்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  சைக்கிள்களை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் இந்திரா பொன் வசந்த் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 64 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு) 11 ஆம் வகுப்பு பயிலும் 128 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன் வசந்த் வழங்கினார்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் விஜயமௌசுமி, தலைமை ஆசிரியர் நாகஜோதி, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story