/* */

மதுரை எய்ம்ஸ் பணி: மத்திய அமைச்சருக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்

மதுரை எய்ம்ஸ் பணியை தொய்வில்லாமல் நடக்க சிறப்பு அதிகாரி நியமித்து விரைவுபடுத்த வேண்டும்! மத்திய அமைச்சருக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!!

HIGHLIGHTS

மதுரை எய்ம்ஸ் பணி: மத்திய அமைச்சருக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்
X

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கீழ் செயல்பட்ட அப்போதைய தமிழக அரசு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மதுரை எய்ம்ஸ் ஏற்கனவே நிலத்தை ஒதுக்கியிருந்தது என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிதியை ஒதுக்கிய இந்திய அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன், தற்போது அங்கு கட்டுமானப்பணி நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது அதனை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து ஒப்புதல் நடைமுறைகளுக்கும் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்கும் வசதியை வகுக்கவும், எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்குச் சுற்றியுள்ள கிராமங்களின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமிருந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெறவும் பரிந்துரைக்கிறேன் .

மேலும் ஜே.ஐ.சி.ஏ விடமிருந்து கடன்பெறத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுமானத்திட்டம் வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவசரகால விசயமாகக்கருதி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். திட்ட செலவினங்களை காலவரிசை அடிப்படையில் அவ்வப்போது திருத்துவதால் கட்டுமானச்செலவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக திட்டமிடப்படுகிற தேதிகளுக்குள் இந்த நடவடிக்கைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 May 2021 4:12 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...