/* */

மதுரையில் வீடு வாடகைக்கு எடுத்து கொள்ளயடிக்க வந்த கும்பல் கைது

மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையடித்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரையில் வீடு வாடகைக்கு எடுத்து கொள்ளயடிக்க வந்த கும்பல் கைது
X

பைல் படம்.

மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று அதிகாலையில் வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது நண்பா் பழனிகுமாா் என்பவருடன், பழங்காநத்தம் டிவிஎஸ் நகா் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவா்களை வழிமறித்து, வழிப்பறி செய்ய முயறனர்.

அப்போது, தடுக்க முயன்ற செந்தில்குமாரை பீர்பாட்டிலால் தாக்கியதும் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். அவர்கள் வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். சுதாரித்து எழுந்த செந்தில்குமார் மற்றும் பழனிக்குமார் இருவரும் வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி ஓடியபோது, ஒரு வீட்டின் அருகே சென்று மறைந்து கொண்டார்.

ரத்த காயத்துடன் செந்தில்குமார் மற்றும் பழனிகுமார் இருவரும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ,அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை சோதனையிட்டபோது, அந்த வீட்டில் இருந்த சென்னையை சோ்ந்த பாஸ்கர் மகன் ஆனந்து, ரவிகுமார் மகன் சுபாஷ், சத்தியசீலன் மகன் குமார், கிருஷ்ண யோகேஸ்வரன் மற்றும் விவேக், கலைச்செல்வன், கருப்பசாமி என்ற மதன், குருசூரஜ், யோகேஸ்வரன் ஆகிய 9 பேரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை பயன்படுத்தி பெரிய அளவில் கொள்ளை அடித்து செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து , 9 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் முன்வழக்கு விபரங்கள் மற்றும் கைரேகை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மதுரை மாநகரில் பெருமளவில் நடைபெற இருந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டு உள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்