மதுரை ரயில் நிலையம் அருகே வங்கியின் முதல் தளத்தில் தீ விபத்து

மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மதுரை ரயில் நிலையம் அருகே வங்கியின் முதல் தளத்தில் தீ விபத்து
X

மதுரை ரயில் நிலையம்  அருகிலுள்ள வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து.

மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் நேரிட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செய்யப்பட்டு பெரும் சேதம் ஏற்படாதவகையில் தீயை அணைத்தனர்

மதுரையில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திடீர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் முருகன் மற்றும் மாசானம் ஆகியோர் மதுரை மேல வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் முதல் தளத்தில் கரும்புகைகள் உடன் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனை அடுத்து, மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு முருகன் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து ,சம்பவ இடத்திற்கு வந்த மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்களில் செந்தில்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் வங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி விரைந்து தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து குறித்து மதுரை திடீர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சேதமான பொருட்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 23 Sep 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு...
  2. நீலகிரி
    குன்னூர் அருகே மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டெருமைகள்
  3. கரூர்
    கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
  4. தர்மபுரி
    tதர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
  5. கோயம்புத்தூர்
    புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன்...
  6. பல்லடம்
    பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த பல்லடம் மின்வாரியம்...
  7. இந்தியா
    எய்ம்ஸ் கண்டறிந்த பாக்டீரியா சீன நிமோனியாவுடன் தொடர்பு: மத்திய அரசு...
  8. தொழில்நுட்பம்
    குறுகிய தூர அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி
  9. தமிழ்நாடு
    இலங்கை கடற்படையினரால் 21 மீனவர்கள் கைது: மீட்க கோரி ஸ்டாலின் கடிதம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ. 5.00