/* */

மதுரை அருகே மிளகாய் பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் வேதனை

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் கத்தரி சாகுபடி செய்கின்றனர்

HIGHLIGHTS

மதுரை அருகே மிளகாய் பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் வேதனை
X

மதுரை அருகே மிளகாய் பயிரில் நோய் தாக்குதலால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள், மர்ம நோயால் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி , வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் ,

கடந்த சில மாதங்களாக மிளகாய் செடியில் மர்ம நோய் தாக்கி செடி நாளடைவில் கருகி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளதால், தென்பழஞ்சி மாவிலிப்பட்டி , கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பயரிடப்பட்ட மிளகாய்ச் செடிகளுக்கு மர்ம நோய் தாக்கி வருவதால் , தாங்கள் முதலீடு செய்து விவசாயம் செய்த மிளகாய் செடிகள் வீணாகி கருகி வருவதை பார்த்து மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கு, வேளாண் துறை அதிகாரிகள், எதற்காக இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது ? அழிவுக்கு காரணம் விதையா? உரமா? என ஆய்வு நடத்தி , உடனடியாக மிளகாய் சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இதே போல் ,கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் மர்ம நோய் தாக்கி கத்தரிக்காய் பெருமளவில் பூச்சி தாக்கி, கத்தரிகாய் அனைத்தும் ஓட்டை ஓட்டையாக பயன்படுத்த முடியாத நிலையில், செடியிலேயே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவ வேதனை அடைந்துள்ளனர்.

Updated On: 25 Nov 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...