அக்னி பாத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்: எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு

அக்னி பாத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்: எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு
X

மதுரை திருப்பரங்குன்றம் பதினாறாம் கால் மண்டபம் அருகே அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ,தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சத்தியாக்கிரகம் போராட்டம் நடைபெற்றது .

Congress opposes Agni Bath project

அக்னி பாத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேலி கூத்தாகும் என்றார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

மதுரை திருப்பரங்குன்றம் பதினாறாம் கால் மண்டபம் அருகே அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ,தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்தியாக்கிரகம் போராட்டம் நடைபெற்றது .

போராட்டத்துக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் சத்தியாகிரகம் போராட்டம் நடத்தி வருகிறோம்.

அக்னிபாத் திட்டம் என்பது இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் திட்டமாக வரப்போகிறது. இந்திய ராணுவத்திற்கு பலவீனப்படுத்தும் திட்டமாகவும் ராணுவத்தின் செயல்திறனை குழைக்கக்கூடிய திட்டமாகவும் இருக்கப் போகிறது.இது குறித்து, குடியரசுத் தலைவரிடம் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்.

இந்தத் திட்டத்தால், வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பு தருவதாக கூறிய மோடி அரசு ஒரு எந்த செயலும் செய்யாமல், இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் ஏமாற்று வேலையை செய்கிறது மோடி அரசு. இளைஞர்கள் வாழ்வில் இந்த திட்டத்தின் மூலம் மோடி அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

அதிமுக மூத்த தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது எனக் கேட்டதற்கு மற்ற கட்சியில் நடப்பதைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் கவலைப்படுவதில்லை.அரசியலில் தரம் குறைந்து வருகிறது அரசியலில் மிகவும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் எப்போதும் கடைபிடிக்கும்.

மதுரை விமான நிலையத்தை பகல் நேர விமான நிலையமாக மட்டுமே செயல்படுத்தும் மோடி அரசின் போக்கை கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தோம் மத்திய விமானத்துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அவரிடம் வலியுறுத்தினோம். கொரோனா காரணமாக காட்டி ஏமாற்றியது போதும்,இரவுநேர சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றால் , மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினோம். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுரை விமான நிலையத்தில், இரண்டாவது முனையம் வேலைகளும் தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த குறைகள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்புவேன். மீண்டும், மத்திய அமைச்சரை சந்திப்பேன் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன் எனக் கூறினார்.

Tags

Next Story
AI Jobs of the Future