மதுரையில் முடிவுற்ற பணிகள்: எம்.பி. தொடக்கம்

மதுரையில் முடிவுற்ற பணிகள்:  எம்.பி. தொடக்கம்
X

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே. பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 23.90 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

மதுரை மாநகராட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 23.90 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை ,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே. பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் (22.08.2023) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம் , வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயிலினை மதுரை எம்.பி. , பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்வில், துணை மேயர் நாகராஜன் உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products