/* */

சிறிய கோயில்களை பூட்டுவது போல, சிதம்பரம் கோயிலை பூட்டமுடியுமா? - சீமான் கேள்வி

எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள், பிரச்னை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

HIGHLIGHTS

சிறிய கோயில்களை பூட்டுவது போல, சிதம்பரம் கோயிலை பூட்டமுடியுமா? - சீமான் கேள்வி
X

மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.

மதுரை.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு:-

விடுதலை பற்றி இத்தனை ஆண்டுகளில் இதுவரை இந்த சட்டம் நடைமுறையில் இல்லை. இதுவரை இருப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உரிய சட்ட முறையை தகர்க்க வேண்டும். புது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் ராணுவத்திற்கு சேரும்போது நான் தாடியை எடுத்துக்கொண்டு சேர்வேன். சீக்கியர்களை தலப்பாவையும் தாடியையும் எடுத்து வரச் சொல்ல முடியுமா? இதெல்லாம் திசை திருப்பும் முயற்சிகள்.

விலைவாசி உயர்ந்துள்ளது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து எதிலும் அடிப்படை கட்டமைப்பு இல்லை. ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொல்கிறார்கள், அப்ப அவர்கள் வேலையில்லாமல் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்? பத்தாண்டுகளில் எத்தனை கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்?

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு :-

இன்னொரு நீதிபதி இருந்திருந்தால் வேறு ஒரு தீர்ப்பு வந்திருக்கும். இரண்டு பேர் அமர்வு என்பதால் இரண்டு தீர்ப்பு வந்துள்ளது. ஒரு வழக்கை எடுத்துக் கொண்டால் கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வரும். இதை பார்த்தால் குழம்பி விடுவோம். சட்டம் சமம் என்பதே இல்லை. ஒரு நாட்டில் ஒரு வழக்குக்கு ஒரு தீர்ப்பு தான் இருக்க வேண்டும்.

சென்னையில் மூன்று வயது குழந்தையின் கை சிகிச்சையில் பறிபோனது குறித்த கேள்விக்கு :-

அது ஒரு பெரும் துயரம். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விட்டது. ஆனால் பல குழந்தைகள் விவகாரம் சத்தம் இல்லாமல் மறைந்துள்ளது. அரசு பதில் சொல்லாமல் இந்த பிரச்னையை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான சிகிச்சை என்று ஒத்துக் கொண்டு, இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொண்டு, பொதுவெளியில் வருந்த வேண்டும். பின்னர் அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். இரண்டு கையுடன் வந்த குழந்தையை மாற்றுத்திறனாளியாக மாற்றி தாயிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு அரசு கூறும் பதில் பொறுப்பானதாக, ஏற்புடையதாக இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் விவகாரம் குறித்த கேள்விக்கு:-

என் இறைவனுக்கு முன்பாக, என் கோவிலுக்கு முன்பாக ஆக்கிரமித்துக் கொண்டு என் தாய் மொழியில் வழிபட விடாமல் செய்கிறார்கள். திரௌபதி அம்மன் கோவிலில் பூட்டை போட்டவர்கள், இதற்கு பூட்டு போட முடியவில்லை. பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. இதை ஒரு கொடுமையாக நான் பார்க்கிறேன், தமிழினத்தின் இயலாமையை காட்டுகிறது. அதிகாரத்தினுடைய வலிமையற்ற தன்மையை காட்டுகிறது. எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள். பிரச்சனை முடியும் வரை இந்த கோவிலை பூட்ட முடியுமா.?

ஆதிதிராவிடர் பேரவை, நாம் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனு கொடுத்தது குறித்த கேள்வி:-

ஆதித்தமிழன் ஆன நான் திராவிடன் ஆகி விடுவேன். அவர்கள் தமிழர் ஆகிவிடுவார்களா. எத்தனை காலத்திற்கு ஏமாற்றுவார்கள். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது, இந்த தலைமுறை விழித்துக் கொண்டு விட்டது, இனி விலகி விட வேண்டும் என்றார்.

Updated On: 5 July 2023 1:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  2. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  4. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  6. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  8. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  9. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  10. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு