மதுரை துவரிமான் அருகே மேம்பாலம் கட்ட ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை துவரிமான் அருகே மேம்பாலம் கட்ட ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் மதுரை எம்பி வெங்கடேசன்.

மதுரை துவரிமான் அருகே மேம்பாலம் கட்ட ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சருக்கு வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி சு. வெங்கடேசன் எம் பி நன்றி தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் - மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான நிர்வாக நடைமுறைகளை துவக்கி திட்ட அறிக்கையை தயார் செய்ய கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி வழங்கினார். நிலம் கையகப்படுத்துதல் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அதனை விரைந்து முடித்துக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தற்போது துவரிமான் - மேலக்கால் சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க ரூ 46.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி. விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு சு வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story