/* */

மதுரையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மதுரையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
X

தீப்பற்றி எரியும் கார் உதிரி பாக விற்பனை நிலையம்.

மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் இரவு வழக்கம்போல் கடை அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றார்.

இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

டவுன் ,தல்லாகுளம், மற்றும் அனுப்பானடி ஆறு தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி குடிநீர் வாகனங்களும் தீயணைப்புத் துறையை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடிய ரசாயன கலவை கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 அவசர கால ஊர்தி காளவாசல் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டது. மேலும் , பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டனர்.

சுமார் 2:30 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயானது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய கார் உதிரி பாகங்கள் தீயிலிருந்து நாசமானது.

சுமார் மூன்று மணி நேரம் பழங்காநத்தம் தெற்கு தெரு, அக்ரகாரம் ,நேரு நகர், பைகாரா உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் இச்சம்பம் குறித்து, எஸ் .எஸ் .காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 March 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  9. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி