மதுரை திருப்பரங்குன்றம் அருகே வாத்து வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வாத்து வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

வாத்து  வியாபாரி மூழ்கிய குளக்கரையில் கூடி நின்ற பொதுமக்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வாத்து வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் அருகே வாத்து மேய்த்தவர் தண்ணீரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், லிங்கவாடி அய்யானார் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியகருப்பன்(வயது36). வாத்து வியாபாரியான இவர், கூத்தியார் குண்டு கண்மாயில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாத்துகள் அதிக ஆழம் உள்ள அதை கரைக்கு கொண்டு வருவதற்காக அவர் தண்ணீருக்குள் இறங்கினார். ஆழம் அதிகமாக இருந்ததால், திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் .

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெரிய கருப்பன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய கருப்பனுக்கு திருமணம் ஆகி பாண்டீஸ்வரி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வாத்து மேய்க்கும் நபர் கண்மாயில் மூழ்கி இறந்தது அப்பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story