மதுரை அருகே பாஸ்ட் புட் கடையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உ.யிரிழப்பு

மதுரை அருகே பாஸ்ட் புட் கடையில்  மின்சாரம் தாக்கி ஒருவர் உ.யிரிழப்பு
X

பைல் படம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாஸ்புட் கடையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகரில் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடையில் மின்சாரம் இல்லாத போது பேட்டரி மூலம் மின்சாரம் விளக்கு பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், இன்று பேட்டரி மூலம் மின்சார விளக்கு இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக பேட்டரியில் இருந்து மின்சாரம தாக்கியதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?