/* */

மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி மரணம்

பாம்பு கடித்ததில் மயக்கமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லை

HIGHLIGHTS

மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி மரணம்
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூரை அருகே அழகிச்சிபட்டியைச் சேர்ந்த காவேரிமணியன். இவரது மனைவி பிரியா (28.) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

பிரியா வழக்கம் போல், அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது , இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கமடைந்ததார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ,மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே, பிரியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ப்ரியாவின் இழப்பு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கீழவளவு காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Updated On: 21 Sep 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  4. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  6. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  7. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  8. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  9. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  10. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு