சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு
X

பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்ட கழிப்பறை. 

மதுரை அருகே சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நவீன கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

மதுரை அருகே சக்கிமங்கலம் எஸ்.கே.பி. நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பெண்களுக்கென, ஸ்வச் பாரத திட்டத்தின் கீழ், புதிய நவீன கழிப்பறை கட்டப்பட்டது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேலு வரவேற்றார். சக்கிமங்கல ஊராட்சித் தலைவி நாகலெட்சுமி, துணைத் தலைவர் கபகதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை சுங்கத்துறை இணை ஆணையர் என். ராம்குமார் சிறப்புரை ஆற்றினார். துணை ஆணையர் நாராயணன், பொறியாளர் சிவக்குமார், கண்காணிப்பாளர்கள் அணில்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare