/* */

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ

மனுதாரர்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

HIGHLIGHTS

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவ
X

உ.யர்நீதி மன்ற மதுரை கிளை

ஜாமீன் வழக்கில் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி, துரைராஜ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், "நாங்கள் இருவரும் வழக்கறிஞரின் சகோதரரை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் எங்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்." என குறிப்பிட்டிருந்தனர்..

இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தாக்கப்பட்டதாக கூறும் நபர் எந்த ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சை அளித்ததற்கான சாட்சியங்கள் இல்லை என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கு குறித்து, நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் மற்றும் கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணைக்கு அழைக்கும் போது இருவரும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Updated On: 24 Sep 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’