மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐப்பசி கோலாட்டா உற்சவம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்   ஐப்பசி கோலாட்டா உற்சவம்
X
ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் கடந்த நவ. 4 -ஆம் தேதி துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம், 5 -ஆம் நாளான இன்று அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில், ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் கடந்த நவ. 4 -ஆம் தேதி துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி கோலாட்ட உற்சவ நாட்களில் தினமும் மாலை அம்மன், ஆடி வீதியில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிபார். மேலும், திருவிழாவின் 5 -ஆம் நாளான இன்று அம்மன் கோ ரதத்தில் நான்கு ஆடி வீதிகளில் வலம் வந்து கொலுசாவடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture