/* */

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் புரண்டோடிய மழை நீர்

மதுரையில் இன்று இடியுடன் கனமழை: சாலைகளில் மழைீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில்  பலத்த மழை: சாலைகளில் புரண்டோடிய மழை நீர்
X

மதுரை நகரில் குளிர்ந்த காற்றுடன் பெய்த பலத்த மழை:

மதுரையில் இன்று இடியுடன் கனமழை: சாலைகளில் மழைீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூரின் மலைப்பாங்கான பகுதிகள், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.மாட்டுத்தாவணி, அண்ணாநகர் வண்டியூர் சிம்மக்கல், காமராஜர் சாலை, பெரியார் பேருந்து நிலையம், புதூர், திருப்பாலை, பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், பசுமலை, அண்ணாநகர், மேலமடை, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் இடி -மின்னலுடன் கன மழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்க வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.இதேபோன்று ,புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, சக்கிமங்கலம்,அழகர்கோவில், சத்திரப்பட்டி, அவனியாபுரம் , விமான நிலையம் திருநகர், உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Updated On: 17 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...