மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்:

மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்:
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதீமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதீமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற டு வளாகத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை வகித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு நீதிமன்றங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

இந்த விழாவில், உயர்நீதி மன்ற நீதிபதிகள். மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி,ரகுபதி,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்,பெரியகருப்பன்,தங்கம்தென்னரசு,பி.மூர்த்தி,பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story