/* */

முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 15 பேருக்கு சிறை : மதுரை சிபிஐ நீதிமன்றம் அதிரடி

வீட்டுக்கடன் வழங்குவதில் முறைகேடு செய்த வங்கியின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முன்னாள் வங்கி மேலாளர்  உட்பட 15 பேருக்கு சிறை : மதுரை சிபிஐ நீதிமன்றம் அதிரடி
X

முன்னாள் வங்கி மேலாளருக்கு சிறை( மாதிரி படம்) 

மதுரை :

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில நேரங்களில் பொறுப்பில் இருப்பவர்களே தவறு செய்வது நடக்கும். அதைப்போலத்தான் இந்த வங்கி மேலாளர் கதையும். பொறுப்பான பதவியில் இருந்த இந்த வங்கி மேலாளர் வீட்டுக் கடன் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தண்டனையை இன்று அனுபவிக்கிறார்.

இந்த வழக்கின்படி அவர் தகுதில்லாதவர்களுக்கும் வீட்டுக்கடனை வழங்கி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தகுதியில்லாத பலருக்கு வீடு கட்ட கடன் வழங்கி ரூ. 1.55 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 15 பேருக்கு மதுரை சிபிஐ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

முன்னாள் வங்கி மேலாளர் என். குணசீலனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டைனை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதமும், தனி நபர்களான பால்ஜான்சன், குமரேசன் ஆகியோர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மகாலிங்கம், ஆறுமுகன், ராஜா தாமஸ், முரளி, திருப்பதி, தங்கராஜ், வடமலை, ஜேசுராஜ், சாரூன்ரஷீத், தேரடி முத்து, சுந்தரேஷன் ஆகியோர்களுக்கு தலா மூன்று மாதம் சிறை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 21 Jun 2023 3:59 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!